நயன்தாரா விக்னேஷ் சிவன்
இணைந்து முதலீடு!
நடிகை நயன்தாரா , அவர் காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து பிரபல தேநீர் நிறுவனமான ‘சாய் வாலே’ வில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
சினிமாவில் இருக்கும் நடிகர் , நடிகைகள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் , உணவகங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வது வழக்கம். ஒரு சிலரே புதுமையான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள்.
அந்த வகையில் வட இந்தியாவில் நல்ல வியாபாரத்துடன் பிரபலமாக இயங்கி வரும் ‘சாய் வாலே’ தேநீர்கடை நிறுவனம் தற்போது தென்னிந்தியாவில் தன்னுடைய 35 கிளைகளைத் தொடங்கும் முயற்சியில் இருந்து வந்ததை அறிந்த நடிகை நயன்தாரா ரூ.5 கோடியை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குதாரராக மாறியிருக்கிறார் .