மாமன்னரிடம் நாளை தனது ராஜினாமாவை வழங்குகிறாரா பிரதமர் முஹிடின்?

பிரதமர் முஹிடின் யாசின் தனது ராஜினாமா கடிதத்தை  நாளை மாமன்னரிடம் அளிக்கிறார். இன்று காலை பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைமையகத்தில் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை  சந்தித்த போது முஹிடின் தனது முடிவை தெரிவித்தார் என்று பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு செயல்பாடுகள்) முகமட் ரெட்ஜுவான் எம்டி யூசோஃப் தெரிவித்தார்.

நாங்கள் சந்திப்பை முடித்துவிட்டோம். நாளை, ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இருக்கும். அதன் பிறகு, அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க இஸ்தானா நெகாராவுக்குச் செல்கிறார் என்று ரெட்ஜுவான்  கூறினார். தனது நிர்வாகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் தீர்ந்துவிட்டதாகவும், ராஜினாமா செல்வதே கடைசி முயற்சியாக இருப்பதாகவும் முஹிடின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்ததாக ரெட்ஜுவான் கூறினார்.

பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு செயல்பாடுகள்) முகமட் ரெட்ஜுவான் எம்டி யூசோஃப் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், முஹிடின் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமராக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here