போர்ட்டிக்சன் தஞ்சோங் துவானில் உள்ள ஒரு தங்குவிடுதியில் (ஹோட்டல்) குளத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். போர்ட்டிக்சன் காவல்துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமது கூறுகையில், ஹோட்டலில் தங்கியிருந்த எஸ்.ஷரிதரன் நாயுடு மற்றும் நண்பர் இருவரும் இன்று (அக். 3) அதிகாலை 1 மணியளவில் குளத்திற்கு நீச்சல் அடிக்க சென்றனர்.
சிறிது நேரம் கழித்து, ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க நண்பர் நடந்து சென்றார். அவர் திரும்பி வந்தபோது, பாதிக்கப்பட்டவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
நண்பர் ஷரிதரன் குளத்தில் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டதாகவும், உடனே போலீசாருக்கு தகவல் வழங்கப்படதாகவும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் வந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாக அவர் கூறினார்.
பிரேத பரிசோதனைக்காக ஷரிதரனின் உடல் போர்ட் டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஃஐடி ஷாம் இந்த வழக்கில் எந்த குற்றவியல் கூறுகளையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இது திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.