கைரி ஜமாலுடின்: மாநிலங்களுக்கிடையிலான சாலைத்தடைகள் அகற்றப்பட்டாலும் SOP சோதனைகள் அமலில் இருக்கும்

கோலாலம்பூர்: மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படும்போது எல்லைகளில் உள்ள தடைகள் அகற்றப்படும் என்றாலும், நிலையான இயக்க நடைமுறை இணக்கம் குறித்த சோதனைகளை அதிகாரிகள் தொடருவார்கள் என்று கைரி ஜமாலுடின் கூறினார்.

பெரிய அளவிலான சாலைத் தடுப்புகளுக்கு இனி சாத்தியமில்லை என்பதால் SOP கடைப்பிடிக்க தவறிய குற்றவாளிகளைப் பிடிப்பது மிகவும் கடினம் என்பதை சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் சாலை தடுப்புகளை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது மற்றும் அனைத்து பயணிகளையும் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்று ஒவ்வொருவராக சோதித்து அந்த இடத்திலேயே கோவிட் -19 பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட முடியாது.

“இது சாத்தியமில்லை. இது ஒரு பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பும் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

“நாங்கள் உள்ளூர் கட்டத்தை (endemic phase) நோக்கி மாறும்போது, ​​நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.

“SOP இணக்கத்தை அமல்படுத்துவதற்காக Ops Patuh இன் கீழ் சகல இடங்களிலும் திட்டமிடப்படாத (random) சோதனைகளை போலீசார் இன்னும் நடத்துவார்கள்” என்று நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மாநிலத்திற்குள் பயணம் செய்வதற்கு முன், தடுப்பூசி போடப்படாதவர்களை, கோவிட் -19 பரிசோதனைகளை எடுக்கும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்த விரும்புகிறதா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

தடுப்பூசி போடாத ஒருவர் எல்லைகளைக் கடந்து செல்ல முடிந்தாலும், அவர்களின் நிலை காரணமாக அவர்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்படும்.

“அவர்கள் வேறு மாநிலத்திற்குப் பயணம் செய்தால், போலீசார் திட்டமிடப்படாத (random) சோதனைகளை நடத்துவதால் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது.

“அவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது மற்றும் அந்த வளாக உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவுடன், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அரசாங்கம் அனுமதிக்கும்.

புதன்கிழமை நிலவரப்படி, 88.8 விழுக்காடு பெரியவர்கள் தங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளை முடித்துவிட்டனர் மற்றும் 90 விழுக்காடு அடைவு மிக விரைவில் எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க கிராமங்களுக்கு (கம்போங்) செல்ல நினைப்பவர்கள், தங்கள் பயணத்திற்கு முன் ஒரு தடுப்பு நடவடிக்கையாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கைரி தனது டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

மேலும் கோவிட் -19 சுய சோதனை கருவிகளின் தற்போதைய உச்சவரம்பு விலையை குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

தற்போது, ​​கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவியின் உச்சவரம்பு சில்லறை விலை 19.90 வெள்ளி ஆகவும் மொத்த விலை 16 வெள்ளி ஆகவும் உள்ளது.

“உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் குறைந்த விலையை நிர்ணயிப்பது பற்றி நான் விவாதித்தேன்.

“நாங்கள் அதை பின்னர் அறிவிப்போம், இதனால் வர்த்தகர்களுக்கு மாற்றம் கொண்ட காலம் இருக்கும் ,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here