இன்று 6,630 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் இன்று 6,630 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளை 2,420,222 ஆகக் கொண்டு வந்தது. தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனை சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது ஆனால் சில மாநிலங்கள் குறிப்பாக சரவாக் (+14.8 சதவீதம்) அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.

அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி, சுகாதார அமைச்சகம் இன்று கோவிட்நவ் போர்ட்டலில் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்றின் விவரங்களை  வெளியிடும்.

6,210 புதிய வழக்குகள் பதிவான நேற்றைய (அக்டோபர் 21) மாநிலங்களின் தொற்று விவரங்கள் பின்வருமாறு: சிலாங்கூர் (1,027), சரவாக் (725), சபா (651), ஜோகூர் (595), கிளந்தான்(540), தெரெங்கானு (485), பேராக் (384), பினாங்கு (381), கோலாலம்பூர் (343), கெடா (319), பகாங் (294), மலாக்கா (235), நெகிரி செம்பிலான் (167), பெர்லிஸ் (33), புத்ராஜெயா (29), லாபுவான் (2).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here