போதையில் இருந்தபோது சகோதரியின் மகளை கத்தி முனையில் மிரட்டிய ஆடவர் கைது

அம்பாங்: போதையில் இருந்ததாக நம்பப்படும் 22 வயது நபர், தனது சகோதரின் மகளை கத்திமுனையில் மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இன்று  (அக் 25) அதிகாலை 2.45 மணியளவில் தாமான் தாசேக் தம்பஹானில் உள்ள பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் சந்தேக நபர் ஊடுருவியதாக அம்பாங் ஜெயா OCPD உதவி ஆணையர் முகமட் ஃபாரூக் இஷாக் தெரிவித்தார்.

சந்தேகநபர் முதலில் பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரியை அணுகி அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பின்னர் சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேக நபரை கைது செய்தனர். அவர் மெத்தம்பேட்டமைன் உட்கொண்டது உறுதியானது என்று அவர் கூறினார்.

சந்தேகநபர் வியாழக்கிழமை (அக்டோபர் 28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி முகமட் பாரூக் தெரிவித்தார். சந்தேக நபர் வேலையில்லாமல் தனிமையில் இருக்கிறார். அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயாரின் இளைய சகோதரர் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என்று அவர் கூறினார். ஆகஸ்ட் மாதத்தில் கொலை செய்வதாக மிரட்டியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முந்தைய அக்குற்றத்திற்கு நீதிமன்றம் அந்த நபருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here