ஆவணமற்ற வெளிநாட்டினரின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு முகவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை

ஆவணமற்ற வெளிநாட்டினரின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான பதிவை நிர்வகிப்பதற்கு குடிவரவுத் துறை எந்தவொரு முகவரையும் அல்லது மூன்றாம் நபரையும் நியமிக்கவில்லை. திட்டத்திற்குப் பதிவு செய்வதில் எந்தவொரு முகவர் அல்லது மூன்றாம் தரப்பினரையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக அதன் இயக்குநர்  டத்தோ கைருல் டிசைமி தாவூத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை (அக். 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: www.imi.gov.my மூலம் நேரடியாகப் பதிவு செய்யலாம். திட்டத்தின் பதிவுக்காக தங்கள் சேவைகளை வழங்கும் முகவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்களை திணைக்களம் பெற்றுள்ளதாக கைருல் டிசைமி கூறினார். இந்த முகவர்களும் மூன்றாம் தரப்பினரும் ஆவணமற்ற வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளுக்கும், அபராதம்  செலுத்தி சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கும் தங்கள் சேவைகளை வழங்கினர்.

தங்கள் சேவைகளைப் பயன்படுத்த முதலாளிகளை ஈர்ப்பதற்காக, என்ஜிஓக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை வழங்கும் நிறுவனங்களுக்குப் பின்னால் முகவர்களும் மூன்றாம் தரப்பினரும் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இந்தத் திட்டத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அறிவிப்புகளைப் பின்பற்றி, துறையுடன் நேரடியாகப் பேசுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். கேள்விகள் உள்ளவர்கள் www.imi.gov.my என்ற ஆன்லைன் விசாரணை அமைப்பு மூலம் துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here