சுபாங் ஜெயா பண்டார் சன்வே PJS 9 இரு தினங்களுக்கு முன் ஒரு வேலையில்லாத நபர் போலீஸ்காரரை போல் நடித்து கொள்ளையடிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
Subang Jaya OCPD Asst Comm Abd Khalid Othman கூறுகையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 49 வயதுடைய சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை குடியிருப்புப் பகுதியில் நிறுத்தியாக கூறினார். பாதிக்கப்பட்டவரிடம் அந்த நபர் தன்னை ஒரு போலீஸ்காரர் என்று அடையாளம் காட்டி கொண்டதோடு பின்னர் அந்த பாதிக்கப்பட்டவரை “ஆய்வு” செய்ய முயன்றதாகவும் கூறினார்.
சோதனையின் மத்தியில், பாதிக்கப்பட்டவர் தப்பி ஓடினார். ஆனால் சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி துரத்தினார். சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை மோதி தள்ளினார். மோதியதன் தாக்கம் பாதிக்கப்பட்டவர் சாக்கடையில் விழுந்தார் என்று செவ்வாய்க்கிழமை (அக் 26) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேக நபரை கைது செய்ததாக ஏசிபி அப்துல் காலிட் தெரிவித்தார். போலி வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை நாங்கள் கைப்பற்றினோம். அதில் காவல்துறை சின்னம் இருந்த அட்டையையும் நாங்கள் கைப்பற்றினோம். சந்தேகநபர் கிரிமினல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு முந்தைய எட்டு பதிவுகளை வைத்திருக்கிறார் என்று அவர் மேலும் கூறினார். விசாரணைகளை எளிதாக்கும் வகையில் சந்தேகநபர் வியாழக்கிழமை (அக்டோபர் 28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.