2022 வரவு செலவுத் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு RM700 சிறப்பு நிதி உதவி

கோலாலம்பூர், அக்டோபர் 29 :

2022 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ், சுமார் ஒரு மில்லியன் மேற்பட்ட அரசு ஓய்வூதியம் பெறுவோர் ஒரு முறை RM350 பண உதவியைப் பெற உள்ளனர்.

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், வகுப்பு (grade) 56 மற்றும் அதற்கும் கீழ் உள்ள 1.3 மில்லியன் அரசு ஊழியர்கள் RM700 சிறப்பு நிதியுதவி பெறுவார்கள் என்றார்.

இந்த நோக்கத்திற்காக அரசாங்கம் RM1.3 பில்லியன் ஒதுக்கும் என்றார்.

இது, குறிப்பாக நாடு கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் செய்த தியாகங்களுக்கு பாராட்டு மற்றும் நன்றிகளை காட்டுவதாகும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here