இரு லோரிகள் – ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்து; இருவர் பலி – ஒருவர் படுகாயம்

கோத்தா திங்கியில்  இரண்டு லோரிகள் மற்றும் கார் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். நேற்று மாலை 4.26 மணியளவில் KM47 ஜாலான் ஜோகூர் பாரு-மெர்சிங்கில் இந்த சம்பவம் நடந்ததாக கோத்தா திங்கி OCPD  ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

மெர்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் சறுக்கியது இந்த விபத்திற்கு காரணமாக அமைந்தது என்று அவர் கூறினார். எதிர் பாதையில் நுழைந்த லோரி ஒரு கார் மீது மோதியது. கார் சாலையின் இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் சுழன்று விழுந்தது.

இரண்டாவதான  Isuzu ரக லோரி, முதல் லோரியின் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றதால், அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு  மரணத்தை விளைவித்தது.
விபத்தில் இரண்டாவது லோரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் முறையே 38 மற்றும் 30 வயதுடையவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்  என்று அவர் கூறினார்.

முதல் லோரியின் 26 வயதான ஓட்டுநர் பலத்த காயமடைந்து கோத்தா  திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  ஹுசின் மேலும் தெரிவித்தார். கார் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும் வாகனம் ஓட்டும் போது சாலையைப் பயன்படுத்துவோர் விழிப்புடன் இருக்கவும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here