இன்று 4,922 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் இன்று 4,922 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,497,265 ஆக உள்ளது. தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5.7 விழுக்காடு குறைந்துள்ளது.

இருப்பினும், சில மாநிலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெரெங்கானு (+30.0%), நெகிரி செம்பிலான் (+14.6%) மற்றும் பகாங் (+11.5 %). அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் அதன் CovidNow போர்ட்டலில் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்றுகளின்  விவரத்தை  வெளியிடும்.

நேற்று (நவம்பர் 4) 5,713 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (1,344),சபா (655), சரவாக் (527), கிளந்தான் (484),
ஜோகூர் (429), கெடா (355), பினாங்கு (340), பகாங் (310), கோலாலம்பூர் (275),
மலாக்கா (250), தெரெங்கானு (234), பேராக் (210), நெகிரி செம்பிலான் (188),
புத்ராஜெயா (55), பெர்லிஸ் (38), லாபுவான் (19).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here