24 மணி நேரத்தில் தொற்று 4,701 – குணமடைந்தோர் 5,382

கடந்த 24 மணி நேரத்தில் 4,701 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 5,382 குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,407,205 ஆக உள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,501,966 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

தீவிர சிகிச்சையில் 544 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 527 பேர் கோவிட்-19  தொற்றும் மற்றும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டனர். இதற்கிடையில் 280 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 212 நோயாளிகள் கோவிட்-19 தொற்றும் மற்றும் மீதமுள்ள 68 பேர் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிப்படுகின்றனர்.

இன்று 4,673 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 4,505 மலேசியர்கள் மற்றும் 168 வெளிநாட்டினர் மற்றும் 28 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன.புதிய நோய்த்தொற்றுகளில், நோயறிதலின் போது 1.9% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4  அல்லது 5 இல் இருந்தனர் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் 0.92 ஆக இருந்தது. புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகியவை முறையே 1.06, 1.03 மற்றும் 1.01 என்ற அதிக R-nought அளவைக் கொண்டுள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களும் 1.00க்கும் குறைவான R-நொட்களை பதிவு செய்தன. அதே சமயம் லாபுவானில் R-nought பூஜ்ஜியம் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here