சுகாதார அமைச்சகம் இன்று 4,543 புதிய கோவிட் -19 தொற்று பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,510,852 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி நாட்டின் R-nough 0.92 ஆக இருந்தது. 1.00 க்கும் குறைவான R-naught என்பது கோவிட்-19 இன் பரவல் குறைந்து வருவதாகக் கூறுகிறது.
R-naught 1.00 ஐ விட அதிகமாக இருக்கும் ஒரே பகுதி புத்ராஜெயா ஆகும், இது கடந்த 14 நாட்களில் 437 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 9.5 விழுக்காடு குறைந்துள்ளது.
இருப்பினும், சில மாநிலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது, குறிப்பாக நெகிரி செம்பிலான் (+17.2 %) மற்றும் தெரெங்கானுவில் (+11.9 %).
கடந்த மாதத்தில் கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்ட நாட்டிலுள்ள ஒரே மாநிலம் தெரெங்கானு ஆகும் கீழே உள்ள மருத்துவமனையில் சேர்க்கும் விளக்கப்படத்தைப் பார்க்கவும். இந்த மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது அதிக கோவிட்-19 ஐசியூ படுக்கை உபயோகத்தைக் (79 %) கொண்டுள்ளது. அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்று குறித்த இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் வெளியிடும்.
நேற்று (நவம்பர் 7) 4,343 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (981), சரவாக் (460), சபா (405), ஜோகூர் (381), கிளந்தான் (376), கெடா (325), பினாங்கு (245), கோலாலம்பூர் (228), பகாங் (220), பேராக் (186)
தெரெங்கானு (186), மலாக்கா (152), நெகிரி செம்பிலான் (148), பெர்லிஸ் (19)
புத்ராஜெயா (17), லாபுவான் (14).