எதிர்வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்ந்த மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் (EC) தலைவரான டத்தோ அப்துல் கானி சாலே இதுபற்றிக் கூறியபோது, ஐந்து அரசியல் கட்சிகளிடமிருந்து மொத்தம் 90 வேட்பாளர்களும் 22 சுயேட்சை வேட்பாளர்களும் மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளனர் என்றார்.
மேலும், பாரிசான் நேஷனல் (BN), பக்கத்தான் ஹரப்பான் (PH) மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் (PN) ஆகிய கட்சிகளிலிருந்து தலா 28 வேட்பாளர்களும், பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (PUTRA) கட்சியிலிருந்து 5 வேட்பாளர்களும், பெரிக்கத்தான் இந்தியா முஸ்லீம் நேஷனல் (IMAN) கட்சியிலிருந்து ஒருவரும் ஏனைய 22 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார் .