கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

அலோர் ஸ்டார், நவம்பர் 11 :

கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அங்கு இரண்டு மாவட்டங்களில் உள்ள மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) 79 குடும்பங்களைச் சேர்ந்த 287 பேர் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கெடா சிவில் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் முஹமட் முவாஸ் முகமட் யூசாஃப் கூறுகையில், குபாங் பாசு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி, 24 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் செகோலா கெபாங்சான் (SK ) கம்போங் ட்ராடிசி லெம்பா கெரியாங்கில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் செகோலா கெபாங்சான் (SK) மலாவ்வில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை, ஆனால் அது இன்னும் திறக்கப்பட்டுள்ளது.

“பெண்டாங்கில் உள்ள இரண்டு PPSஇல் , அதாவது தானா மேராவிலுள்ள திவான் ரகான் சுகானில் 36 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 147 பேரும் திவான் செந்தரவாசிஹ் PPS இல் 19 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here