திரெங்கானுவில் 2020 முதல் அக்டோபர் 2021 வரை 6,565 முஸ்லிம் விவாகரத்துகள் பதிவு

கோலத்திரெங்கானு, நவம்பர் 16:

திரெங்கானுவில் 2020 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 6,565 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநில மனித மேம்பாடு, டக்வா மற்றும் தகவல் குழுவின் தலைவர் முகமட் நோர் ஹம்சா இதுபற்றிக் கூறுகையில், 2020 ஆம் ஆண்டில் 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 2021 அக்டோபர் வரை 2,433 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் கூறினார்.

“கோலா திரெங்கானுவில் அதிக எண்ணிக்கையிலான விவாகரத்துகள் அல்லது திருமண உறவுகள் முறிவுகள் பதிவாகின, இது 1,923 தம்பதிகளை உட்படுத்தியதாகும். அதற்கு அடுத்து அதிகபட்சம் கெமாமன் (1,151) மற்றும் டுங்குன் மாவட்டம் (1,003) ஆகியவையும் பதிவு செய்துள்ளன.

“சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்குகளில் தம்பதியினரின் வயது 21 முதல் 65 வரை இருந்தது,” என்று அவர் இன்று, விஸ்மா தாருல் இமானில் உள்ள மாநில சட்டசபையில் கேள்வி-பதில் அமர்வின் போது அவர் கூறினார்.

திரெங்கானுவில் பதிவு செய்யப்பட்ட விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட வயது வகை மற்றும் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து ரோஸ்லீ டாட் (BN-Bukit Besi) கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இஸ்லாம் பற்றிய பாராட்டு மற்றும் புரிதல் இல்லாமை தவிர, நிதி சிக்கல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவை இந்த விவாகரத்துகளுக்கு வழிவகுத்த காரணிகளில் அடங்கும் என்றும் முகமட் நோர் மேலும் கூறினார்.

எனவே, விவாகரத்து விகிதத்தை குறைக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை வகுத்து வருகிறது, அடுத்த ஆண்டு முதல் திருமணத்திற்கு முந்தைய பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

— பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here