மலாக்கா மாநிலத் தேர்தலில் PN தனது முதல்வர் வேட்பாளரை நாளை அறிவிக்கும்

மலாக்கா, நவம்பர் 17 :

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) கட்சி தனது முதல்வர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் நபர் யார் என்று நாளை அறிவிக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

PN இன் முதல்வர் வேட்பாளர் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்ற சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

“நாங்கள் மற்ற கூட்டணி கட்சிகளுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம், நான் பெர்சாத்து தலைவரைச் சந்தித்தேன், PN பொதுச் செயலாளர் என்ற முறையில் இது குறித்து எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

“நாங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்போம் என்றார்.

“எனவே, நாங்கள் ஒரு பெண் வேட்பாளரை (முதல்வராக) நியமித்தாலோ அல்லது பெண் வேட்பாளர் இல்லை என்றாலோ, நாங்கள் எங்கள் வேட்பாளர்களில் ஒருவரை நிச்சயமாக அறிவிப்போம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உயர்மட்டத் தலைமையுடன் கலந்தாலோசித்த பிறகு வியாழன் அன்று தமது கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று ஹம்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here