இரண்டு அல்லது மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் பயனுள்ளதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் அழகுக்காக தான் உபயோகிக்கப்படுகிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பேராசிரியர் ட்ரிஷ் கிரீன்ஹால்க் கூறியுள்ளார்.
ஓமிக்ரான் தொற்றானது, தற்போது மக்கள் பயன்படுத்தும் வண்ணமயமான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான துணியாலான முகக்கவசங்கள் அணிவதை பற்றி மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க செய்துள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பேராசிரியர் கிரீன்ஹால்க் கூறுகையில், துணியிலான முகக்கவசங்கள் ‘மிகவும் நல்லவை அல்லது பயங்கரமானவை’ என்பது அதைத் தயாரிக்க பயன்படுத்தும் துணியின் வகையை பொறுத்தே முடிவு செய்ய முடியும்.
இறுக்கமாக நெய்யப்பட்ட பருத்தி, பட்டுத்துணியின் நான்கு அடுக்குகள்,மற்றும் பருத்தி மற்றும் ஃபிளானல் அல்லது பருத்தி மற்றும் சிஃப்பான் போன்ற துணி கலவைகளாலான முக்கக்கவசங்கள் சிறந்தவை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிலவற்றின் கலவையால் உருவாக்கப்படும் இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்ட முகக் கவசங்கள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் அழகுக்காக தான் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். ஓமிக்ரான் தொற்றுநோயின் பரவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் N95 மாதிரியான முக கவசங்களை தயாரிப்போர் அதை கிட்டத்தட்ட 95% கிருமிகளை வடிகட்டுகிறதா என்பதை நிச்சயம் உறுதிசெய்ய வேண்டும். இருப்பினும் நீங்கள் உங்கள் வாய் மற்றும் மூக்கை முகக்கவசத்தால் சரியாக மூடவில்லையெனில் அவ்வாறு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசம் எந்தவித பயனையும் அளிக்காது.
சுற்றுச்சூழல் குறித்தோ அல்லது பணம் குறித்தோ கவலை கொள்ளும் மக்கள் துணியிலான முக கவசத்தை நாடுகின்றனர். ஏனெனில் அவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல தான் கிருமிகளை சிறந்த முறையில் வடிகட்டும் வகையிலும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இறுக்கமான முகக்கவசங்களை அணிந்து கொள்வதற்கு பதிலாக, ஒற்றை அடுக்கு முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்று ஏற்கனவே கனடாவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்டாரியோவின் அறிவியல் ஆலோசனை கூட்ட தலைவர் பீட்டர் ஜூனி கூறுகையில், ஒற்றை அடுக்கு முகக்கவசங்களில் கிருமிகளை வடிகட்டும் திறன் சற்று குறைவாக தான் இருக்கும், மேலும் இவை எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.