ஜார்ஜ் டவுன், டிசம்பர் 28 :
பெங்கலன் வெல்டில் உள்ள காட் லெபு மக்கல்லத்தில் இன்று காலை ஒரு படகு தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மீதி 5 பேர் காயமடைந்தனர்.
காலை 10.54 மணியளவில் தீ விபத்து குறித்து லெபோ பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, படகில் சுமார் 20 விழுக்காடு எரிந்து நாசமானது என்று செயல்பாட்டு அதிகாரி முகமட் யஹாயா முராத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட ஆறு பேர் அங்கிருந்து மீட்கப்பட்டனர், அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, காயப்பட்ட அனைவருக்கும் சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்தவரை தவிர ஏனைய ஐந்து பேரின் கைகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், காலை 11.08 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தன்னார்வத் தீயணைப்புப் படையினரின் உதவியுடன், அந்த இடத்தில் இன்னும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக யாஹாயா மேலும் கூறினார்.