சரிந்து வரும் கோவிட் தொற்று – இன்று 3,386 பேருக்கு தொற்று உறுதி

சுகாதார அமைச்சகம் இன்று 3,386 புதிய கோவிட் -19  தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,761,472 ஆக உள்ளது.

டிசம்பர் 25 அன்று 0.88 ஆக இருந்த நோய்த்தொற்று விகிதம் நேற்றைய நிலவரப்படி 0.98 ஆக இருந்தது. ஆனால் 1.0 வரம்புக்குக் கீழே உள்ளது. புதிய நோய்த்தொற்றுகளில் அதிவேக வளர்ச்சியைத் தடுக்க மதிப்பு 1.0 க்கு கீழ் வைக்கப்பட வேண்டும். தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 4.4% குறைந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய தொற்றுகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும்.

3,573 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நேற்றைய (டிசம்பர் 31, 2021) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (949), ஜோகூர் (382), கிளந்தான் (379), பகாங் (315), பினாங்கு (238), சபா (231), கோலாலம்பூர் (205), கெடா (200), பேராக் (175),
நெகிரி செம்பிலான் (154), மலாக்கா (150), தெரெங்கானு (135),புத்ராஜெயா (24), பெர்லிஸ் (15), சரவாக் (14), லாபுவான் (7).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here