சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 18 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. முந்தைய நாள் இறப்பு 23 ஆக இருந்தது. அதில், இரண்டு பேர் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,696 ஆக உள்ளது.
ஜோகூர் 4, கெடா (3), பகாங், சிலாங்கூர், தெரெங்கானு மற்றும் கோலாலம்பூர் (தலா 2) மற்றும் கிளந்தான், மலாக்கா மற்றும் பேராக் (தலா 1). நெகிரி செம்பிலான், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் உயிரிழப்புகள் இல்லை.
நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) 253 உட்பட 39,742 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. அவர்களில் 106 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
மேலும் 2,808 பேர் குணமடைந்துள்ளர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,788,860 ஆக உள்ளது.