இஸ்கந்தர் புத்திரி, ஏப்ரல் 21 :
ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ டாக்டர் முகமட் புவாட் ஷர்காசி, ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக இன்று பதவியேற்றார்.
15வது ஜோகூர் மாநில சட்டசபையின் முதல் அமர்வில், முகமட் புவாட்டின் நியமனத்தை, ஜோகூர் மந்திரி பெசார், டத்தோ ஓன் ஹபீஸ் காசி வழங்கினார்.
மச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான ஓன் ஹபீஸ், சபாநாயகர் வேட்பாளராக ஒரு பெயரை மட்டுமே முன்மொழிந்தார், அவருடைய வேட்புமனுவை பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜஹாரி சரிப் ஆதரித்தார்.
ஜோகூரில் 2018 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த சுஹைசன் கயாத்துக்குப் பதிலாக முகமட் புவாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முகமட் புவாட் அம்னோ உச்ச செயற்குழு உறுப்பினர் ஆவார் மற்றும் 12வது பொதுத் தேர்தலில் (GE-12) வெற்றி பெற்ற பிறகு, பத்து பகாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் 2009 முதல் 2013 வரை கல்வி துணை அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









