சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 14 புதிய கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 31,882 ஆக உள்ளது.
சிலாங்கூர், ஜோகூர், பேராக், கெடா மற்றும் தெரெங்கானு ஆகிய இடங்களில் தலா இரண்டு பேரும், சபா, பகாங், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பினாங்கு, நெகிரி செம்பிலான், கிளந்தான், சரவாக், பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் மரணங்கள் பதிவு செய்யவில்லை.
நள்ளிரவு நிலவரப்படி, 44,088 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 141 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளன. அவர்களில் 62 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
மேலும் 2,858 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,829,089 தொற்றுகளாக உள்ளது.