கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 331 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 185 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 இல் உள்ளன. 146 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 இல் உள்ளன. சிலாங்கூர் 74 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (64) மற்றும் ஜோகூர் (36) உள்ளன.
நேற்று 335 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட் -19 தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐசியுக்கள்) அவற்றின் மொத்த கொள்ளளவான 859 படுக்கைகளில் 16% இல் உள்ளன என்றார்.
இன்று ICU படுக்கைகளின் எண்ணிக்கை 50% அளவைத் தாண்டிய எந்தப் பகுதியும் இல்லை. மொத்தம் 81 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 9% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புத்ராஜெயாவில் (53%) சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியது.
பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை முக்கியமான படுக்கைகள் 57% திறனில் இருந்தன. அதே சமயம் 52% ஐசியுக்கள் பயன்பாட்டில் இருந்தன. நேற்று பத்து புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன.