கோலாலம்பூர்:
இன்று இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மூன்று நீதிபதிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார்.

அரண்மனையின் சிங்கஹ்சானா கெசிலில் நடைபெற்ற விழாவில், கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி டத்தோ லீ ஸ்வீ செங்கிற்கு முதலில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ் மற்றும் டத்தோ டாக்டர் லிம் ஹாக் லெங் ஆகியோருக்கும் நியமனக் கடிதங்களை மாட்சிமை தங்கிய பேரரசர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம், மலாயா தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் மற்றும் சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டான் ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் அட்டர்னி ஜெனரல் டத்தோ முகமட் துசுகி மொக்தார், ஆட்சியாளர்களின் மனு முத்திரை பாதுகாப்பாளர் டான் ஸ்ரீ சையத் டேனியல் சையட் அகமட் , கூட்டாட்சி நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் டத்தோ ஜம்ரி ஹாஜி பக்கர் மற்றும் நீதித்துறை நியமன ஆணைய செயலாளர் சலினா இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

லீ முன்பு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், அதே நேரத்தில் ஹயாத்துல் அக்மல் மற்றும் லிம் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















