கோலாலம்பூர், மே 23:
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் 75வது உலக சுகாதார மாநாட்டில், உலக சுகாதார சபையின் ஐந்து துணைத் தலைவர்களில் ஒருவராக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கேரியா, இந்தோனேசியா, டோகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுடன் கைரியும் நியமிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பின் வீடியோவை சுகாதார அமைச்சகம் நேற்று இரவு உள்ளூர் ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சரின் ஆலோசகர் திமிஷ்ட்ரா சித்தம்பலம் தனது டுவீட்டில் கைரியின் நியமனத்தை உறுதிப்படுத்தினார்.
கைரி மேற்கு பசிபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் இந்த பிராந்தியம் 37 நாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ”என்றும் அவர் தெரிவித்தார்.