பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11 :
இங்கு அருகே உள்ள கம்போங் டத்தோ கெராமாட்டில் உள்ள பாசார் கெராமாட்டில், இதே சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் தீப்பிடித்தது.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.30 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து, கெராமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP), ஜாலான் ஹாங் துவா BBP, வாங்சா மாஜூ BBP, ஜாலான் துன் ராஸாக் BBP மற்றும் தாப்பா BBP ஆகியவற்றிலிருந்து 14 இயந்திரங்களுடன் 47 உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தீ மிக வேகமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“இச் சந்தையில் ஏற்பட்ட தீயினால், சந்தையின் 50 விழுக்காடு எரிந்து நாசமானது அத்தோடு அருகிலுள்ள சில வீடுகள் சுமார் 10 விழுக்காடு அழிந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று, அவர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
அதிகாலை 2.11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.