கொலம்பியா சிறையில் கலவரம்; தீயில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி பலி

போகோடா, ஜூன் 29:

கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது. அந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தின்போது சிறையில் தீப்பற்றியது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் சிறை முழுவதிலும் பரவியது. இத் தீயில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் 24 கைதிகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில், சிறையிலிருந்து தப்பிக்க அதிகாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிறைக்குள் தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட மோதலால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கலவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என துலுவா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here