ஜோகூர் பாரு, ஜூலை 10 :
இன்று காலை சுல்தான் அபுபக்கர் மசூதியில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புத் தொழுகையின் போது, கூறிய ஆயுதம் வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறுகையில், 57 வயதுடைய நபர், பெல்ட்டில் மாட்டப்பட்ட கைப்பிடி உட்பட சுமார் 33 சென்டிமீட்டர் அளவுள்ள உறையிலிருந்த கத்தியை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைஅடுத்து, காலை 8.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
“கைப்பற்றப்பட்ட ஆயுதம் தனிநபரின் பூர்வீக நாட்டில் பண்டிகை அலங்காரங்களில் ஒன்று என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும், மலேசிய சட்டங்களின்படி, இது கூர்மையான மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் சட்டம் 1958 இன் கீழ் குற்றமாகும், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 6 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், பிரம்படியும் வழங்க இறகு வழி செய்யும் என்று ரவூப் கூறினார்.