இஸ்கந்தர் புத்ரி, பெண்டாஸ் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகன விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்கிழமை (ஜூலை 12) நள்ளிரவு 12.30 மணியளவில் விபத்து நடந்ததாக இஸ்கந்தர் புத்ரி OCPD உதவி ஆணையர் ரஹ்மத் அரிஃபின் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் கெலாங் பாத்தாவிலிருந்து முத்தியாரா ரினியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் சறுக்கியதாக நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருவரும் தலை மற்றும் மூட்டுகளில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். 19 வயதான லீ கா கோக் மற்றும் 15 வயது பெண் பயணி கொல்லப்பட்ட இருவர் ஆவர் என்று ஏசிபி ரஹ்மத் மேலும் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஏசிபி ரஹ்மத் தெரிவித்தார். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கூலாயில் உள்ள தெமங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.