முன்மொழியப்பட்ட புகைபிடித்தல் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

புகையிலை மற்றும் புகைத்தல் கட்டுப்பாட்டு மசோதாவிற்கு முன்மொழியப்பட்ட வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன்  தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த கூட்டத்தொடருக்கு நான் அதை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறேன் என்று அவர் வியாழக்கிழமை (ஜூலை 14) தி சென்டரின் போதைப்பொருள் ஆய்வு அறிக்கை நிகழ்ச்சியின்போது  செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்மொழியப்பட்ட மசோதாவில் 2005க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட், புகையிலை மற்றும் வேப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான விதிகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here