பெண் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது

சிரம்பான், செப்.30 :

புரோகாவைச் சேர்ந்த பெண்ணைக் கடத்திச் சென்று, கொலை செய்த வழக்கில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சிலாங்கூரில் உள்ள அம்பாங்கில் தடுத்து வைக்கப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர், டிசிபி அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

“சந்தேக நபரின் சிறுநீர் சோதனைகளும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் காரணமாக எதிர்மறையான பதிலைப் பெற்றுள்ளன மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவர் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.” என்று அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்ட 27 வயது பெண், செப்டம்பர் 26 ஆம் தேதி கடத்தப்பட்டது குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்ததாக டிசிபி ஜாஃபிர் கூறினார்.

அந்த பெண் ஒரு நாள் முன்னதாக புரோகாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் செயலியில் அவரை விடுவிக்க வேண்டுமானால், அதற்காக பிணைத் தொகை கோரி செய்தி வந்ததாக அவர் கூறினார்.

பின்னர் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

இருப்பினும், செப்டம்பர் 27 ஆம் தேதி, பத்து தெகாலி, உலு லங்காட்டின் பள்ளத்தாக்கில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதைப் பற்றி பொதுமக்களிடமிருந்து உலு லங்காட் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது.

அந்தச் சடலம் கடத்தப்பட்ட பெண்ணினுடையது என அவரது குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here