இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு ஒன்று நேற்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர்.
காரங்ககேசம் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அந்த பயணிகள் படகில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்நிலையில், பயணிகளைக் காப்பாற்ற இரண்டு இந்தோனேசிய கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
மீட்புப் படையினரும், மீனவர்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.