போர்ட் டிக்சன்: ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) இரவு சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
இரவு 9.30 மணியளவில் KM14.4 இல் விபத்து நேர்ந்தபோது, 19 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் 14 வயது சிறுமியும், சுமார் 50 மோட்டார் சைக்கிள்களுடன் சிரம்பானுக்கு சென்று கொண்டிருந்தனர்.
போர்ட்டிக்சன் OCPD Supp Aidi Sham Mohamed கூறுகையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 62 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற காரின் பின்புறம் மோதியதாக ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட இருவரும் தங்கள் வாகனத்திலிருந்து விழுந்தனர். இதனால் ஏழு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அவர்களைத் தவிர்க்க முயன்றபோது மோதினர்.
14 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஓட்டுநர் சிரம்பானிலுள்ள உள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்று அவர் திங்கள்கிழமை (நவம்பர் 21) கூறினார்.
பாதிக்கப்பட்ட ஆண் காஜாங்கை சேர்ந்த வர்த்தகர் என்றும், கோலாலம்பூரைச் சேர்ந்த சிறுமி ஒரு மாணவி என்றும் ஐடி ஷாம் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.