புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டில்லியில் என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டல்பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டில்லியில் என்சி ஆர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. சேதாரம் குறித்த தகவல்கள் தெரியவில்லை.