நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியே துறைமுகத்தில் தீப்பரவல்

நில நடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியேயில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அங்கு எரிந்து போன கன்டெய்னர்களில் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியானது.

அங்கு தொடர்ந்து 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் துருக்கி கடலோரக் காவல் படை கப்பல் உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கன்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here