அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரச அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.