சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று, மத்திய இந்தியப் பெருங்கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.
அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும்.
இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அனைத்துலக கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.





















