புக்கிட் கெபாயாங், சிரம்பான் 2ல் உள்ள உணவக உரிமையாளரை குண்டர்கள் போல் நடித்து, மிரட்டிய இருவர் நேற்று முன்தினம் இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு சந்தேக நபர்களும் முறையே தீயணைப்பு சாதனம் விநியோகம் செய்பவர் (24) மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரராக (55) பணியாற்றிய இருவரும், இங்குள்ள தாமான் புக்கிட் கயாவில் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.