கிள்ளான் LRT நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்!

கோலாலம்பூர்:

டந்த டிசம்பர் 21 அன்று கிள்ளானில் உள்ள ஸ்ரீ ஆண்டலாஸ் LRT நிலையம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்றுக்காலை 7.30 மணியளவில், அப்பகுதியால் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பலர் இச்சடலத்தைப் பார்த்தனர் என சமூகவலைத்தளங்களில் பல பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

Utusan Malaysia இன் அறிக்கையின்படி, சம்பவ இடத்திற்கு பல போலீஸ் கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது, ஆனால் அச்சம்பவம் பற்றிய கூடுதல் விவரங்கள் எந்த தரப்பினராலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறியதாக சைனா பிரஸ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here