வங்காளதேசத்தில் இந்து மத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் – கடவுள் சிலைகள் அடித்து உடைப்பு

பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வங்காளதேச நாட்டின் பிரம்மன்பரியா மாவட்டம் நைமத்பூர் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான நைமத்பூர் துங்கை கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்குள் கடந்த வியாழக்கிழமை இரவு வந்த நபர் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்தினர் . மேலும் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அடித்து உடைத்தார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன், தப்பியோடிய நபரையும் துரத்திப்பிடித்தனர்.

பின்னர், அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் கடவுள் சிலைகளை உடைத்தது கலீல் மியா என்ற நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கலீல் மியாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here