மெர்சிங்: எண்டாவ் பாலத்தில் இருந்து புதன்கிழமை (ஜூலை 26) மதியம் 1.35 மணியளவில் விழுந்ததாகக் கூறப்படும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் தேடுதல் பணி நிறைவடைந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த அதிகாரி முகமட் அலியாஸ் ஹுசின் கூறுகையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நள்ளிரவு 12.44 மணியளவில் மீனவர்களால் சடலம் காணப்பட்டது.
அவர்கள் இங்குள்ள எண்டாவ் மீன்வள மேம்பாட்டு வாரிய ஜெட்டியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சடலத்தைப் பார்த்தார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முகமட் அலியாஸ் கூறுகையில், பலியான 50 வயதுடையவரின் சடலம் அவர் விழுந்த கடைசி இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோல சுங்கை எண்டாவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கையில் அதன் பணியாளர்கள், கடல் காவல் துறையினர், போலீசார் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் ஈடுபட்டதாக முகமட் அலியாஸ் கூறினார். பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், நடவடிக்கை நள்ளிரவு 1.35 மணியளவில் முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.