சிங்கப்பூரின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) சனிக்கிழமையன்று, செந்தோசா தீவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போதைப்பொருள் கடத்திய குற்றங்களுக்காக 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
49 சந்தேக நபர்களும் 21 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 35 பேர் சிங்கப்பூரர்கள் என்று சி.என்.பி (Central Narcotics Bureau) அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது “எக்ஸ்டசி” மற்றும் கெத்தமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் உள்ளிட்ட தடைப்படுத்தப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுவதாக சி.என்.பி (Central Narcotics Bureau) தெரிவித்துள்ளது.