ஜார்ஜ் டவுன்: முதலமைச்சர் செள கோன் இயோவ் இன்று முதல் சனிக்கிழமை வரை சீனாவின் ஜியாமென் நகரில் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான சீன அனைத்துலக கண்காட்சியில் கலந்துகொள்ளவும், ஜியாமென்-பினாங்கு சகோத உறவின் 30ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கவும் உள்ளார்.
பினாங்கில் உள்ள சீன மக்கள் குடியரசின் துணைத் தூதரகம் மற்றும் ஜியாமென் முனிசிபல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளும் நமது நாட்டின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்துவதில் மகத்தான வாக்குறுதியைக் கொண்டுள்ளன.
முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவுடன் செள பயணக்கிறார். இந்த பிரதிநிதிகள் குழுவின் முதன்மை கவனம் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான சீனா அனைத்துலக கண்காட்சியில் பங்கேற்பதை மையமாகக் கொண்டுள்ளது. இது அனைத்துலக பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு முயற்சிகளை வளர்ப்பதற்கு ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.
ஒரே நேரத்தில், இந்த பயணமானது சியாமென்-பினாங்கு சகோதர நகர உறவின் 30ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது. இது நமது இரு நகரங்களுக்கிடையில் நீடித்திருக்கும் கூட்டாண்மையைக் குறிக்கிறது. பயணம் முழுவதும், முதல்வர் மற்றும் உடன் வரும் தூதுக்குழு உயர்மட்ட உரையாடல்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் சியாமென் மற்றும் பிற அனைத்துலக பங்கேற்பாளர்களிடமிருந்து வரும் சகாக்களுடன் கலாச்சார பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள்.
இது பினாங்கின் முதலீட்டு வாய்ப்புகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு சிறந்த தருணமாக அமையும்.
இந்த மதிப்புமிக்க அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பினாங்குக்கும் ஜியாமெனுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் உறுதிப்படுத்தி, இரு நாட்டின் பரஸ்பர நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், பினாங்கின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் பயனுள்ள விஜயத்தை முதல்வர் எதிர்பார்த்திருப்பதாக அது கூறியது. இந்த முக்கியமான பணி நிமித்தமாக பயணம் கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் இல்லாத நேரத்தில், மாநிலத்தின் நிர்வாக விவகாரங்கள் தடையின்றி செயல்படும் என்று அது மேலும் கூறியது.