மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தைப் பிரபலப்படுத்த மாநில அரசு முயற்சி

மலாக்கா:

பத்து பரெண்டாமில் உள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்திற்கு விமானச்சேவை நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, சிறப்புச் சலுகைகளை வழங்க மலாக்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.

அண்மையில் இரு விமானச்சேவை நிறுவனங்கள் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் சேவை வழங்குவதை நிறுத்திக்கொண்டன.

“போதுமான பயணிகள் இல்லாததும் உயர் செலவுகளும் இதற்கான காரணம் என்று விமானச்சேவை நிறுவனங்கள் கூறின,” என்று மலாக்கா மாநில பணி, உள்கட்டமைப்பு, பொது வசதிகள், போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோ ஹமீட் மைதீன் குஞ்சு ப‌ஷீர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணங்களை மலாக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வருவதற்காக இதுவரை ஆறு விமானச்சேவை நிறுவனங்களைச் சந்தித்திருப்பதாக அவர் கூறினார்.

“இதுவரை சாதகமான (பதில்) எதுவும் கிடைக்கவில்லை… அவர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் அவர்.

மலாக்காவில் செப்டம்பர் 29ஆம் தேதி அனைத்துலக விமானக் காட்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் ஆஸ்திரேலியா, ர‌‌ஷ்யா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானத் துறையினரும், உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெறும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here