MAS உணவை தைரியமாக உண்ணலாம்-லோக்

பெட்டாலிங் ஜெயா:

மாஸ் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் உண்பதற்கு பாதுகாப்பானது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.

KL அனைத்துலக விமான நிலையத்தில் தற்காலிக கூடாரங்களில் இருந்து விநியோகிக்கப்படும் உணவு பாதுகாப்பாக கையாளப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. அத்தோடு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று அவர் நேற்று மெனாரா ஸ்டாரில் நடைபெற்ற மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (MICCI) 50 வது ஆண்டு பொதுக் கூட்டத்துடன் இணைந்த உரையாடலில் கூறினார்.

Shell மலேசியா, HSBC மலேசியா, சைம் டார்பி BHD ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் உள்ளூர் தொழில்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here