Jawan: “சம்பளம் வாங்கவில்லை. ஷாருக்கானிற்காக இதில் நடித்தேன்! தீபிகா படுகோன்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘ஜவான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் ‘ஜவான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் அட்லி, நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோன், இசையமைப் பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். படத்தின் நாயகியான நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்.அப்போது இப்படத்தில் நடித்தது குறித்தும், படத்திற்கான வரவேற்பு குறித்தும் பேசிய தீபிகா படுகோன், “அனைவருக்கும் மிக்க நன்றி என்ற வார்த் தையைத் தவிர என்னிடம் கூற வேறு வார்த்தைகள் இல்லை. ஷாருக்கான் மீது நான் வைத்திருக்கும் அன்பிற்காகத்தான் இப்படத்தில் நடித்தேன். இந்த அளவிற்கான வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை.

இதனிடையே சிரித்துக்கொண்டே பேசிய ஷாருக்கான், “நாங்கள் தீபிகாவை ஏமாற்றி விட்டோம். கேமியோ ரோலில்தான் நடிக்கப்போகிறோம் என்று தீபிகா நினைத்தார். ஆனால் அவரை வைத்து நாங்கள் முழுப்படத்தையும் எடுத்துவிட்டோம் என்றார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய தீபிகா படுகோன், “’ஜவான்’ படத்திற்கு நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ரன்வீர் சிங்கின் ’83’ல் நான் கேமியோ ரோலில் நடித்ததற்குக் காரணம் கணவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது தவிர, ஷாருக்கான் மற்றும் ரோஹித் ஷெட்டி படங்களில் கேமியோ ரோல்களில் நடிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

2007-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘ஓம் சாந்தி ஓம்’ படம் மூலமாகத்தான் தீபிகா படுகோன் பாலிவுட்டுக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து ஷாருக்கான் மேல் தான் பெரிய மரியாதை வைத்திருப்பதாக தீபிகா பலமுறை தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here