பெலாங்காய் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் காசிம் சாமாட் போட்டி

பெந்தோங்:

ம்னோவின் கோட்டையாக கருத்தப்படும் பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் (PN ) கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்த காசிம் சாமாட்டை மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான், காசிமை PN இன் வேட்பாளராக அறிவித்தார், இதற்கு அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

பெலாங்காய் மாநில சட்டமன்றம் மொத்தம் 16,456 வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் சிலாங்கூர் எல்மினா, ஷா ஆலம் நகருக்கு அருகே நடந்த விமான விபத்தில் ஜோஹாரி, 53, காலமானதைத் தொடர்ந்து பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலில், ஜொஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையுடன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here