விபத்துக்குள்ளான காரை இழுத்துச் செல்வதில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 10 பேருக்கு 2 நாட்கள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர்:

செராஸிலுள்ள கம்போங் மலேசியா தம்பஹானில், விபத்திற்குள்ளான காரை இழுத்துச் செல்வதில் நேற்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை தொடர்பில் கைது செய்யப்பட்ட மொத்தம் 10 பேர் இன்று முதல் இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின்படி விசாரணை நடத்தப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி,நேற்று எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர் என்றார்.

“நாட்டின் சட்டங்களுக்கு இணங்காத எந்தவொரு நபருடனும் காவல்துறை சமரசம் செய்யாது என்றும் ,சமூகத்தின் நல்லிணக்கத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here