இந்த ஆண்டுக்கான அரசு மானியம் RM81பில்லியனை மிஞ்சும் என்கிறார் பிரதமர்

கோத்தா கினாபாலு:

ந்த ஆண்டுக்கான மொத்த அரசு மானியம் RM81பில்லியனை விட அதிகமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்களில் மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு ஆகியவை அடங்கும்.

மக்களின் வாழ்க்கைச் செலவினைக் குறைக்க அரசு மானியங்கள் மூலம் செலவிடும் RM81பில்லியன் என்பது அதிகமாகக் காணப்பட்டாலும், மக்களின் தேவைகளைப் பார்க்காமல் மானியத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் விருப்பமல்ல என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தை பொறுத்தவரை இது மிகப்பெரிய தொகையாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவித் தொகை செயற்படுத்தப்படுகிறது.

இந்த உதவித் தொகைகள் இலக்கு வைக்கப்பட்ட மக்கள் அதாவது வசதி குறைந்த மக்களைச் சென்றடைய வேண்டும். அதுவே அரசாங்கத்தின் முதன்மை இலக்காக உள்ளது என்று சபா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய இஸ்லாமிய விவகார மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here